வெள்ளி, 20 அக்டோபர், 2017
வியாழன், 19 அக்டோபர், 2017
பிறந்தநாள்
என் இனியவளின்
பிறந்தநாளை
பார்த்து
மற்ற
நாட்களும்
புலம்பிக்கொண்டே
இருக்கின்றன
என்
நாட்களில்
பிறக்க
கூடாதா
என்று...
செல்லமாக
என் இனியவள்
வீட்டு
நாய்க்குட்டி
கூட
என்னை
கண்டால்
குரைப்பதில்லை
மிருகங்கள்
பெயரை
சொல்லி சொல்லி
செல்லமாக
திட்டித்திட்டி
செல்லமாக்கி
விட்டாள்
அதனுடன் ...
விரிசல்கள்
என் இனியவளே
முதல்
முறை
உன்
வீட்டிற்கு
வந்த
போது
நான்
பார்த்து
ஆச்சரியப்பட்டது
உன்
அறையில்
பீரோவில்
இருக்கும்
ஆளுயரக்
கண்ணாடியைத்தான்
ஏனென்றால்
இத்தனை
நாட்களாய்
உன்
அழகையெல்லாம்
பார்த்துக்
கொண்டிருந்தும்
விரிசல்கள்
விழாமல்
அப்படியே
இருக்கிறதே...
என்னுடையது
என்னுடையது
என்று
தான்
இதுவரை
நினைத்து
வந்தேன்
ஆனால்
முதல்
முறை
பார்த்ததும்
அழுது
கொண்டிருக்கும்
குழந்தை
தன் அம்மாவை
கண்டதும்
ஓடி சென்று
ஒட்டிக்கொள்வதை
போல
என்
இதயம்
என் இனியவளிடம்
அடைக்கலமானது...
பூக்கள்
பூக்கள்
எல்லாம்
பூக்கூடையிலிருந்து
தாவி
குதித்து
தற்கொலை
செய்துகொள்ள
தயாரானது
என் இனியவள்
வேறு
பூவை
கூந்தலில்
சூடிக்கொண்டு
வீதியில்
நடந்து
சென்றதை
பார்த்த போது...
சத்தம்
என் இனியவளே
கைபேசியில்
எல்லாம்
நீ
எனக்கு
முத்தத்தை
தராதே
அது
உன்
"முத்தத்தை"
எடுத்துக்கொண்டு
வெறும்
"சத்தத்தை"
மட்டுமே
எனக்கு
தருகிறது...
பொறாமை
என் இனியவள்
கைபேசியில்
என்னுடன்
பேசிக்கொண்டிருப்பது
எனக்கு
மகிழ்ச்சி
என்றாலும்
அவள்
கைபேசி
மீது
எனக்கு
பொறமை
பேசும்போதெல்லாம்
அவள்
கண்ணத்தை
தொட்டு
கொண்டிருக்குமே
என்று...
இதமாய்
புல்வெளியில்
நடந்தால்
பாதம்
இதமாய்
இருக்குமாம்
என் இனியவள்
புல்வெளியில்
நடந்தால்
பூல்வெளிக்கே
இதமாய்
இருக்கிறதாம்...
இரட்டைப்பிறவி
என் இனியவளே
நீயென்ன
இரட்டை
பிறவியா
நேரில்
காணும்போது
அழகியாகவும்
காணதபோது
பேரழகியாகவும்
காட்சியலிக்கிறாய்...
அழியாது
என் இனியவளே
உன்னால்
நான்
கண்ட
இன்பமும்
துன்பமும்
இந்த
ஜென்மத்தில்
அல்ல
எந்த
ஜென்மத்திலும்
என்னை
விட்டு
அழியாது....
அருகில்
என் இனியவளே
என்
வாழ்க்கையில்
எத்தனை
துன்பங்கள்
வந்தாலும்
தாங்கிக்கொள்வேன்
ஆறுதல்
கூறுவதற்கு
நீ
என்
அருகில்
இருப்பியானால்...
ஞாயிறு, 15 அக்டோபர், 2017
புதன், 11 அக்டோபர், 2017
நல்ல பெயர்
என்இனியவளிடம்
மட்டுமே
நல்ல
பெயர்
எடுக்க
வேண்டுமென்று
நினைக்கிறேன்
ஆனால்
அவளுக்கு
மட்டுமே
தெரிந்துவிடுகிறது
என் குறைகள்...
காதல் சிற்பி
காதல்
செதுக்குவதாக
நினைத்து
நான்
செதுக்கி
முடிப்பதற்குள்
என் இனியவளின்
காதல்
என்னை
செதுக்கி
முடித்தது...
அற்ப மானிடர்கள்
என் இனியவளை
காதலிப்பதால்
தான்
நான்
கவிதை
எழுதுகிறேன்
என
எல்லோரும்
சொல்கிறார்கள்
நான்
காதலிப்பதே
ஒரு
கவிதையைத்தான்
என
உணராத
அற்ப
மானிடர்கள்...
கவிதை
என் இனியவளே
எப்பொழுது
கவிதை
எழுத
போகிறாய்
என
நீ
ஒவ்வொரு
முறையும்
கேட்கும்
போதுதான்
உணர்கிறேன்
கவிதை
எழுத
வேண்டும்
பேசவிடக்கூடாது
என...
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
வர்ணிக்க
என் இனியவளே
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேட
முடியாது
எனென்றால் அதற்கு
ஒரு ஜென்மம்
போதாது பல ஜென்மம்
வேண்டும்…
உன்னிடம்
கவிதை பேசுகிறான்
என்கின்றார்கள்
என் இனியவளே
உன்னிடம் பேச
ஆரம்பித்ததும்
கவிதையிடமே
பேசுகின்றானே
என்கின்றார்கள்...
விருது
என் கவிதைகளை
என் இனியவள்
படிப்பதால்
மற்ற கவிதைகளை விட
என் கவிதை
சிறந்த கவிதை என
விருது பெற்றுக்கொள்கின்றது…
கவிதை விளையாட்டு
மாலை வேலையில்
மணலில் வீடு செய்து
விளையாடும் குழந்தை
போல் நானும்
என் இனியவளை
நினைத்து தினமும்
கவிதை செய்து
விளையாடுகிறேன்….
கண்கள்
கவிதை எழுத கடினம்
என்கிறார்கள்
என் இனியவளின்
கண்களை கண்ட பின்
ஒரு கவிதை நூலகமே
அமைத்து விட்டேன்
என் இதயத்தில்...