வெள்ளி, 20 அக்டோபர், 2017

புது புது புதிர்கள்

அவிழ அவிழ
புது புது
புதிர்கள்
புதிதாய்
"கிளை"
விடுவதும்
புரிந்த
இடத்தில்
புரியாமையின்
ஆரம்பம்
"முளை"
விடுவதும்
என் இனியவளின்
காதலில்
மட்டுமே ...

உயிர்

உடலுக்கு
வெளியே
உயிர்
நின்றாலும்
உயிர்
வாழ
முடியும்
என்பதை
என் இனியவள்
என்
எதிரில்
நின்ற
பிறகு
தான்
புரிந்து
கொண்டேன்...

மீண்டும் மீண்டும்

"மாம்ஸ்"
என்று
கூப்பிடும்
போதும்

"லூசு"
என
அழைக்கும்
போதும்

"கோபமா"
என
கேட்கும்
போதும்

"ஸாரி பேசு"
என
கெஞ்சும்
போதும்

"என் செல்ல ராஸ்கல்"
என
கொஞ்சும்
போதும்

"எனக்கும் கோபம் வரும்"
என
திணரும்
போதும்

என் இனியவளிடம்
மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்
நான்...

இமைகள்

என் இனியவள்
இமைக்கும்
அழகை
காணவே
இமைக்காமல்
கிடக்கின்றன
என்
இமைகள்....

சந்தர்பம்

என் இனியவள்
அழகான
உணர்வுகள்
எனக்குள்
உருவாகவும்
அசைந்தாடும்
மலரோடு
நான்
பேசவும்
சந்தர்பம்
தந்தாள்...

ஒற்றை சிகப்பு ரோஜா

இந்திரா காந்திக்கும்
தன்
தந்தை
நேரு
மாமாவை
போல்
ஒற்றை
சிகப்பு
ரோஜா
என்றால்
ரொம்ப
பிரியமாம்
அவர்
பிறந்த
அதே
நாளில்
பிறந்ததால்
தான்
என்னவோ
என் இனியவளுக்கும்
ஒற்றை
சிகப்பு
ரோஜாவின்
மீது
அவ்வளவு
பிரியம்...

திருவிழா

திருவிழா
காண
ஊருக்கு
போகிறேன்
என்கிறாய்
என் இனியவளே
நீ
ஊருக்கு
போனாலே
திருவிழா
தானே...

குலதெய்வம்

குலதெய்வத்தையே
குலதெய்வ
கோயிலுக்கு
அழைத்து
செல்லும்
என் இனியவளின்
சொந்தங்களை
நினைத்தால்
எனக்கு
சிரிக்கத்தான்
தோன்றுகிறது...

சமாதானம்

என் இனியவளிடம்
நான்
பாசமா
பேசுகிற
நேரத்தை விட
காரணமில்லாமல்
சண்டையிட்டு
அதற்கு
சமாதானம்
செய்யும்
நேரம்
தான்
அதிகம் ...

சண்டையிட்டு

இரவில்
சண்டையிட்டு
காலையில்
ஒன்றும்
நடக்காதது
போல்
என் இனியவள்
பேசும்
பேச்சில்
தான்
ஒளிந்து
கிடக்கிறது
என் காதல்...

கற்பனை

கருநீல
மேகத்தை
தொட்டு
காதல்
சொல்லும்
கற்பனையை
என் இனியவள்
எனக்கு
தந்தாள்...

அழகிய கண்கள்

என் இனியவளின்
கண்கள்
அழகிய
மலர்களை
போன்றது
அதை
பரித்ததை
விட
பறிகொடுத்ததே
அதிகம் ...

மருதாணி

என் இனியவளின்
விரல்கள்
தீண்டியதில்
வெட்கப்பட்டு
சிவந்து
போனது
மருதாணி

கட்டிக்கொள்ளலாமே

என் இனியவளே
நான்
உன்னை
காண
வரும்போது
சேலை
மட்டும்
தான்
கட்டிக்கொள்ள
வேண்டுமா
என
கேட்கிறாய்
தேவையில்லை
என்னையும்
கட்டிக்கொள்ளலாமே...

கள்ள விரல்கள்

என் இனியவளே
எல்லோரும்
இருக்கும்
போதும்
யாருக்கும்
தெரியாமல்
ஆட்டம்
போடும்
உன்
கள்ள
விரல்களை
என்ன
செய்ய
நான்...

அனுபவம்

என் இனியவளே
அன்று
உன்னில்
"மண்ணுலகில்"
அனுபவித்த
சந்தோஷம்
"விண்ணுலகில்"
சென்று
வந்தது
போல்
உணர்ந்தேன்...

துளிர்

என் இனியவளே
நான்
உன்னில்
புதைந்து
கிடக்கும்
கவிதை
எப்பொழுது
வேண்டும்
என்றாலும்
துளிர்
விடுவேன்
நீ
என்னை
ஒரு
நிமிடம்
நினைத்து
பார்த்தால்...

வியாழன், 19 அக்டோபர், 2017

தேவதை

என் இனியவளே
நான்
உனக்கு
எழுதிய
கவிதைகளை
என்
நண்பர்கள்
கேட்கிறார்கள்
அவர்களின்
காதலிக்கு
கொடுக்க
நான்
கொடுக்க
மறுக்கிறேன்
தேவதைக்கு
எழுதிய
கவிதைகள்
பெண்களுக்கு
எப்படி
பொருந்தும்...

காதல் தேன்

பட்டாம்பூச்சியாய்
வந்து
என்
இதயத்தில்
காதல்
என்ற
தேனை
பருகி
கொண்டிருப்பவள்
தான்
என் இனியவள்...

தவம்

ஒன்றை
மட்டுமே
நினைத்து
தன்னை
மறப்பதுதான்
தவம்
என்கிறது
உன்
"மதம்"
என் இனியவளே
உன்னை
மட்டுமே
நினைத்து
என்னை
மறப்பதும்
கூட
தவம்
தான்
என்கிறது
என்
"மனம்"...

பூ

பூவை
சூடியிருக்கும்
கூந்தலை
பார்த்திருப்பிர்கள்
கூந்தலே
சூடியிருக்கும்
பூ தான்
என் இனியவள்..

இலையோடு

பூவாக
பூத்திடாத
இலைக்கும்
மனக்குறை
தீர்ந்தது
என் இனியவள்
இலையோடு
சேர்ந்து
மலரையும்
சூடியபோது

தூக்கம்

முதல்
முறை
தூக்கம்
இனித்ததும்
என்
முழூ
முதல்
தூக்கம்
இழந்ததும்
என் இனியவளின்
காதலில்
தான்...

பிறந்தநாள்

என் இனியவளின்
பிறந்தநாளை
பார்த்து
மற்ற
நாட்களும்
புலம்பிக்கொண்டே
இருக்கின்றன
என்
நாட்களில்
பிறக்க
கூடாதா
என்று...

செல்லமாக

என் இனியவள்
வீட்டு
நாய்க்குட்டி
கூட
என்னை
கண்டால்
குரைப்பதில்லை
மிருகங்கள்
பெயரை
சொல்லி சொல்லி
செல்லமாக
திட்டித்திட்டி
செல்லமாக்கி
விட்டாள்
அதனுடன் ...

விரிசல்கள்

என் இனியவளே
முதல்
முறை
உன்
வீட்டிற்கு
வந்த
போது
நான்
பார்த்து
ஆச்சரியப்பட்டது
உன்
அறையில்
பீரோவில்
இருக்கும்
ஆளுயரக்
கண்ணாடியைத்தான்
ஏனென்றால்
இத்தனை
நாட்களாய்
உன்
அழகையெல்லாம்
பார்த்துக்
கொண்டிருந்தும்
விரிசல்கள்
விழாமல்
அப்படியே
இருக்கிறதே...

என்னுடையது

என்னுடையது
என்று
தான்
இதுவரை
நினைத்து
வந்தேன்
ஆனால்
முதல்
முறை
பார்த்ததும்
அழுது
கொண்டிருக்கும்
குழந்தை
தன் அம்மாவை
கண்டதும்
ஓடி சென்று
ஒட்டிக்கொள்வதை
போல
என்
இதயம்
என் இனியவளிடம்
அடைக்கலமானது...

கடத்தல்

என் கண்கள்
ஆயிரம்
கடந்ததடீ
என் இனியவளே
உன்
கண்ணிரொண்டும்
மட்டும்
என்னை
கடத்தியதடீ...

மௌனம்

எத்தனை
சத்தத்திலும்
என்னை
அதிர
செய்வது
என்
இனியவளின்
மௌனம்
மட்டுமே...

பூக்கள்

பூக்கள்
எல்லாம்
பூக்கூடையிலிருந்து
தாவி
குதித்து
தற்கொலை
செய்துகொள்ள
தயாரானது
என் இனியவள்
வேறு
பூவை
கூந்தலில்
சூடிக்கொண்டு
வீதியில்
நடந்து
சென்றதை
பார்த்த போது...

சத்தம்

என் இனியவளே
கைபேசியில்
எல்லாம்
நீ
எனக்கு
முத்தத்தை
தராதே
அது
உன்
"முத்தத்தை"
எடுத்துக்கொண்டு
வெறும்
"சத்தத்தை"
மட்டுமே
எனக்கு
தருகிறது...

பொறாமை

என் இனியவள்
கைபேசியில்
என்னுடன்
பேசிக்கொண்டிருப்பது
எனக்கு
மகிழ்ச்சி
என்றாலும்
அவள்
கைபேசி
மீது
எனக்கு
பொறமை
பேசும்போதெல்லாம்
அவள்
கண்ணத்தை
தொட்டு
கொண்டிருக்குமே
என்று...

இதமாய்

புல்வெளியில்
நடந்தால்
பாதம்
இதமாய்
இருக்குமாம்
என் இனியவள்
புல்வெளியில்
நடந்தால்
பூல்வெளிக்கே
இதமாய்
இருக்கிறதாம்...

இரட்டைப்பிறவி

என் இனியவளே
நீயென்ன
இரட்டை
பிறவியா
நேரில்
காணும்போது
அழகியாகவும்
காணதபோது
பேரழகியாகவும்
காட்சியலிக்கிறாய்...

விரல் நகம்

என் இனியவளின்
உணர்ச்சி
இல்லாத
விரல்
நகம்
கூட
வெட்டி
எறிந்த
பின்
புலம்பி
அழுதுகொண்டே
இருக்கின்றது...

அழியாது

என் இனியவளே
உன்னால்
நான்
கண்ட
இன்பமும்
துன்பமும்
இந்த
ஜென்மத்தில்
அல்ல
எந்த
ஜென்மத்திலும்
என்னை
விட்டு
அழியாது....

அருகில்

என் இனியவளே
என்
வாழ்க்கையில்
எத்தனை
துன்பங்கள்
வந்தாலும்
தாங்கிக்கொள்வேன்
ஆறுதல்
கூறுவதற்கு
நீ
என்
அருகில்
இருப்பியானால்...

தொலைவில்

என் இனியவளே
எனக்கு
பிடித்தது
எல்லாம்
தொலைவில்
அன்று
நிலா
இன்று
நீ...

குடை

என் இனியவளை
மழையில்
இருந்து
காப்பாற்றிய
மகிழ்ச்சியில்
ஆனந்த
கண்ணீர்
வடிக்கின்றன
அவள்
குடை...

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தற்கொலை

என் இனியவளை
தெடாமுடியாத
ஏக்கத்திலும்
துக்கத்திலும்
மழை
துளிகள்
எல்லாம்
வீதியில்
துக்க
ஊர்வலம்
சென்று
ஆற்றிலும்
குளத்திலும்
விழ்ந்து
தற்கொலை
செய்து
கொள்கின்றன...

புதன், 11 அக்டோபர், 2017

நல்ல பெயர்

என்இனியவளிடம்
மட்டுமே
நல்ல
பெயர்
எடுக்க
வேண்டுமென்று
நினைக்கிறேன்
ஆனால்
அவளுக்கு
மட்டுமே
தெரிந்துவிடுகிறது
என் குறைகள்...

காதல் சிற்பி

காதல்
செதுக்குவதாக
நினைத்து
நான்
செதுக்கி
முடிப்பதற்குள்
என் இனியவளின்
காதல்
என்னை
செதுக்கி
முடித்தது...

அற்ப மானிடர்கள்

என் இனியவளை
காதலிப்பதால்
தான்
நான்
கவிதை
எழுதுகிறேன்
என
எல்லோரும்
சொல்கிறார்கள்
நான்
காதலிப்பதே
ஒரு
கவிதையைத்தான்
என
உணராத
அற்ப
மானிடர்கள்...

கவிதை

என் இனியவளே
எப்பொழுது
கவிதை
எழுத
போகிறாய்
என
நீ
ஒவ்வொரு
முறையும்
கேட்கும்
போதுதான்
உணர்கிறேன்
கவிதை
எழுத
வேண்டும்
பேசவிடக்கூடாது
என...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

வர்ணிக்க

என் இனியவளே
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேட
முடியாது
எனென்றால் அதற்கு
ஒரு ஜென்மம்
போதாது பல ஜென்மம்
வேண்டும்…

உன்னிடம்

கவிதை பேசுகிறான்
என்கின்றார்கள்
என் இனியவளே
உன்னிடம் பேச
ஆரம்பித்ததும்
கவிதையிடமே
பேசுகின்றானே
என்கின்றார்கள்...

கவிதை புத்தகம்

ஒரு கவிதை
புத்தகத்தின் பக்கம்
திருப்பபடுகின்றது
என் இனியவள்
கண்களை மூடி
திறக்கும் போது...

விருது

என் கவிதைகளை
என் இனியவள்
படிப்பதால்
மற்ற கவிதைகளை விட
என் கவிதை
சிறந்த கவிதை என
விருது பெற்றுக்கொள்கின்றது…

கவிதை விளையாட்டு

மாலை வேலையில்
மணலில் வீடு செய்து
விளையாடும் குழந்தை
போல் நானும்
என் இனியவளை
நினைத்து தினமும்
கவிதை செய்து
விளையாடுகிறேன்….

கண்கள்

கவிதை எழுத கடினம்
என்கிறார்கள்
என் இனியவளின்
கண்களை கண்ட பின்
ஒரு கவிதை நூலகமே
அமைத்து விட்டேன்
என் இதயத்தில்...