அவிழ அவிழ
புது புது
புதிர்கள்
புதிதாய்
"கிளை"
விடுவதும்
புரிந்த
இடத்தில்
புரியாமையின்
ஆரம்பம்
"முளை"
விடுவதும்
என் இனியவளின்
காதலில்
மட்டுமே ...
உடலுக்கு
வெளியே
உயிர்
நின்றாலும்
உயிர்
வாழ
முடியும்
என்பதை
என் இனியவள்
என்
எதிரில்
நின்ற
பிறகு
தான்
புரிந்து
கொண்டேன்...
"மாம்ஸ்"
என்று
கூப்பிடும்
போதும்
"லூசு"
என
அழைக்கும்
போதும்
"கோபமா"
என
கேட்கும்
போதும்
"ஸாரி பேசு"
என
கெஞ்சும்
போதும்
"என் செல்ல ராஸ்கல்"
என
கொஞ்சும்
போதும்
"எனக்கும் கோபம் வரும்"
என
திணரும்
போதும்
என் இனியவளிடம்
மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்
நான்...
என் இனியவள்
இமைக்கும்
அழகை
காணவே
இமைக்காமல்
கிடக்கின்றன
என்
இமைகள்....
என் இனியவள்
அழகான
உணர்வுகள்
எனக்குள்
உருவாகவும்
அசைந்தாடும்
மலரோடு
நான்
பேசவும்
சந்தர்பம்
தந்தாள்...
இந்திரா காந்திக்கும்
தன்
தந்தை
நேரு
மாமாவை
போல்
ஒற்றை
சிகப்பு
ரோஜா
என்றால்
ரொம்ப
பிரியமாம்
அவர்
பிறந்த
அதே
நாளில்
பிறந்ததால்
தான்
என்னவோ
என் இனியவளுக்கும்
ஒற்றை
சிகப்பு
ரோஜாவின்
மீது
அவ்வளவு
பிரியம்...
திருவிழா
காண
ஊருக்கு
போகிறேன்
என்கிறாய்
என் இனியவளே
நீ
ஊருக்கு
போனாலே
திருவிழா
தானே...