ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

வர்ணிக்க

என் இனியவளே
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேட
முடியாது
எனென்றால் அதற்கு
ஒரு ஜென்மம்
போதாது பல ஜென்மம்
வேண்டும்…

உன்னிடம்

கவிதை பேசுகிறான்
என்கின்றார்கள்
என் இனியவளே
உன்னிடம் பேச
ஆரம்பித்ததும்
கவிதையிடமே
பேசுகின்றானே
என்கின்றார்கள்...

கவிதை புத்தகம்

ஒரு கவிதை
புத்தகத்தின் பக்கம்
திருப்பபடுகின்றது
என் இனியவள்
கண்களை மூடி
திறக்கும் போது...

விருது

என் கவிதைகளை
என் இனியவள்
படிப்பதால்
மற்ற கவிதைகளை விட
என் கவிதை
சிறந்த கவிதை என
விருது பெற்றுக்கொள்கின்றது…

கவிதை விளையாட்டு

மாலை வேலையில்
மணலில் வீடு செய்து
விளையாடும் குழந்தை
போல் நானும்
என் இனியவளை
நினைத்து தினமும்
கவிதை செய்து
விளையாடுகிறேன்….

கண்கள்

கவிதை எழுத கடினம்
என்கிறார்கள்
என் இனியவளின்
கண்களை கண்ட பின்
ஒரு கவிதை நூலகமே
அமைத்து விட்டேன்
என் இதயத்தில்...