என் இனியவளே
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேட
முடியாது
எனென்றால் அதற்கு
ஒரு ஜென்மம்
போதாது பல ஜென்மம்
வேண்டும்…
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
வர்ணிக்க
உன்னிடம்
கவிதை பேசுகிறான்
என்கின்றார்கள்
என் இனியவளே
உன்னிடம் பேச
ஆரம்பித்ததும்
கவிதையிடமே
பேசுகின்றானே
என்கின்றார்கள்...
விருது
என் கவிதைகளை
என் இனியவள்
படிப்பதால்
மற்ற கவிதைகளை விட
என் கவிதை
சிறந்த கவிதை என
விருது பெற்றுக்கொள்கின்றது…
கவிதை விளையாட்டு
மாலை வேலையில்
மணலில் வீடு செய்து
விளையாடும் குழந்தை
போல் நானும்
என் இனியவளை
நினைத்து தினமும்
கவிதை செய்து
விளையாடுகிறேன்….
கண்கள்
கவிதை எழுத கடினம்
என்கிறார்கள்
என் இனியவளின்
கண்களை கண்ட பின்
ஒரு கவிதை நூலகமே
அமைத்து விட்டேன்
என் இதயத்தில்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)